‘‘நான் அமைதியா இருக்கேன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க ’’ : பதிலடி கொடுத்த சமந்தா

Samantha
By Irumporai Apr 23, 2022 06:45 AM GMT
Report

நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவிற்கான காரணம் புரியாமல் குழம்பி வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படம் தற்போது ரிலீஸ்க்கு தயாரக உள்ளது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் நடிகர் நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

இந்த முடிவு திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போதெல்லாம் சமூகவலைதளத்தில் தீவிரமாக உள்ளார், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு டிவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'எப்போதும் என்னுடைய அமைதியை அவமதிப்பு என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். என்னுடைய மௌனத்த்தை சம்மதம் என்று புரிந்து கொள்ளாதீர்கள். என்னுடைய அன்பை என் பலவீனம் என்று புரிந்து கொள்ளாதீர்கள்' என்று கபதிவிட்டுள்ளார்.

மேலும் அதே டிவீட்டை பகிர்ந்து “அன்புக்கும் ஒரு எக்ஸ்பயரி தேதி உண்டு. #justsaying” எனக் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த திடீர் பதிவிற்கு காரணம் புரியாமல் குழம்பி வருகின்றனர் ரசிகர்கள்.