ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாமென்றாரா சமந்தா ? நாக சைதன்யா சமந்தா விவாகரத்து பின்னணி என்ன ?

samantha nagachaitanya 200crore alimony
By Irumporai Oct 02, 2021 02:37 PM GMT
Report

தன்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும் எனக் கூறி நாக சைதன்யா குடும்பம் தனக்கு கொடுக்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது.

சிறந்த தம்பதி என பலராலும் பாராட்டப்பட்ட இவர்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தகவல் பரவி வந்தது. ஆனால், இது குறித்து பொதுவெளியில் இருவரும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர்.

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவுடனான திருமண உறவை தான் முறித்துக் கொள்வதாக தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் பரவின. இன்று கூட இதுகுறித்து இருவரும் பொது விளக்கம் அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அதிலும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக சமந்தா அறிவிக்க இருக்கிறார் என்ற தகவலை பரப்பினர். இந்த நிலையில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.

இதனிடையே,விவாகரத்துக்காக நாக சைதன்யா குடும்பம் சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தர முன் வந்ததாகவும், அதை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தன்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும் என்றும் ஜீவனாம்சம் வேண்டாம் எனவும் சமந்தா கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.