பல கோடி மதிப்பிலான திருமண சேலையை திருப்பி கொடுத்த சமந்தா - இடிந்து போன நாகசைதன்யா - நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.
இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது நிச்சயதார்த்தம் மற்றும் திருமண சேலையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடம் கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிச்சயதார்த்த சேலையும், திருமண சேலையும் சமந்தாவுக்காக நாகசைதன்யா குடும்பம் ரொம்ப ஸ்பெஷலாக வடிவமைத்தனர்.
அந்த சேலையில் சமந்தா, சைதன்யாவின் காதல் கதை, அவர்கள் வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்க சென்றது, சைதன்யாவின் தம்பி அகிலின் திருமண நிச்சயதார்த்தம் என நாகார்ஜூனா குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
இந்த சேலை அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் அந்த சேலையையும் திருமணத்திற்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் வாங்கி கொடுத்த சேலையையும் நடிகை சமந்தா அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து, நாக சைதன்யாவின் சம்பந்தப்பட்ட எதுவும் தன்னிடம் இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சமந்தா திருமண சேலைகளை திருப்பி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.