சமந்தாவை வெறுப்பேற்ற நாகசைதன்யா போட்ட ப்ளான்? - வெளியான ரகசியத் தகவல்?
காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் காதல் பறவைகளாக பறந்துக் கொண்டிருந்தனர்.
யார் கண்ணு பட்டதோ... கடந்த ஆண்டு விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக இருவரும் சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.
இவர்களது அறிவிப்பை கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயர் நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தா, கோவில், சுற்றுலாவிற்கெல்லாம் சென்று வந்தார்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.இதனால், நடிகை சமந்தாவின் மார்க்கெட் மளமளவென எகிறத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நாகசைதன்யாவும் தன் படங்களில் அதிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
‘மாநாடு’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறாராம்.
ஏற்கெனவே நடிகை சமந்தாவிற்கும், பூஜா ஹெக்டேவிற்கும் சில பிரச்சனைகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், தற்போது நாக சைதன்யா பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது சமந்தாவை கடுப்பேற்றி உள்ளதாம்.