நாகசைதன்யாவின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சமந்தா - வைரலாகும் பதிவு - ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதற்காக நடிகை சமந்தாவிற்கு, நடிகை நயன்தாரா நட்பின் அடையாளமாக ஒரு அழகான காதணியை பரிசாக கொடுத்தார். அந்த பரிசை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தையோடு பதிவு செய்து வெளியிட்டார். இந்த பதிவில் நடிகை சமந்தா நயன்தாராவிற்கு நன்றி கூறினார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இவர்கள் இருவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான ‘மஜிலி’ என்ற திரைப்படம் 3 ஆண்டுகளை நிறைவு அடைந்ததையடுத்து, அதை கொண்டாடும் விதமாக அப்படத்தின் போட்டோவை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில் நாக சைதன்யாவுடன் நடிகை சமந்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.