‘துவண்ட நேரத்தில்.... நீங்கள்தான் என்னை மீட்டு கொண்டு வந்தீங்க....’ - அந்த நபர் குறித்து சமந்தா டுவிட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக இருவரும் சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.
இவர்களது அறிவிப்பை கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயர் நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தா, கோவில், சுற்றுலாவிற்கெல்லாம் சென்று வந்தார். பிறகு, தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி தன்னுடைய வேலையைப் பார்த்து வருகிறார்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நான் சில பிரச்சினைகளால் துவண்டு போய், மன அழுத்தத்திற்கு ஆளானபோது, நீங்கள் ஒருவர்தான் என்னை மீட்டு கொண்டு வந்துள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் யாரை குறிப்பிடுகிறார் என்றால், கடந்த 2019ம் ஆண்டு நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஓ பேபி’. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கி இருந்தார்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில், இயக்குநர் நந்தினி ரெட்டியின் பிறந்தநாளையொட்டி நேற்று அவருக்கு தனது வாழ்த்துக்களை நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அந்த வாழ்த்து பதிவில், ‘என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் மிகவும் பிரச்சனையாக இருந்த நேரத்தில் எனக்கு நீங்கள் தன்னம்பிக்கையை ஊட்டினீர்கள். அது எனக்கு நேற்றைப் போலவே இருக்கிறது. கடந்த 2012ஆம் ஆண்டு நான் மிகவும் தன்னம்பிக்கை இழந்து படப்பிடிப்புக்கு கூட செல்ல தயங்கினேன். நீங்கள் அந்த நேரத்தில் என்னை பார்க்க வந்தீர்கள். உங்களுடைய பிஸியான நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு நம்பிக்கையை திரும்ப கொடுத்தீர்கள். அடுத்த நாளே நான் நீங்கள் கொடுத்த தன்னம்பிக்கையால் படப்பிடிப்புக்கு சென்றேன். எப்படி அந்த தன்னம்பிக்கை எனக்கு வந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது’ என்று பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.