போனில் நலம் விசாரித்த நாகசைதன்யா... - மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் சமந்தா? தீயாய் பரவும் தகவல்..!

Samantha Naga Chaitanya
By Nandhini Nov 17, 2022 02:30 PM GMT
Report

போனில் நலம் விசாரித்த நாகசைதன்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ சமந்தா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.

இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் சமந்தா ரூத் பிரபு ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

எலும்பு தோலுமாக மாறிய சமந்தா

சமீபத்தில், ‘யசோதா’ படத்திற்காக விளம்பரம் செய்ய சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார்.

அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள், பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு... சமந்தா... நீங்க... எலும்பும் தோலுமாக மாறிட்டீங்க... உங்க உடம்பை நல்லபடியாக பார்த்துக்கோங்க.. ரொம்ப வேலையில் இறங்காதீங்க... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

samantha-naga-chaitanya

மனம் மாறிய சமந்தா

இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா அவருக்கு போன் போட்டு நலம் விசாரித்துள்ளாராம்.

நாக சைதன்யா பேசிய பிறகு சமந்தா மனம் மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ சமந்தா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதை சமந்தா இன்னும் உறுதி செய்யவில்லை. இதற்கிடையே நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் தயவு செய்து இருவரும் சேர்ந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.