இப்போ... உன் உடம்பு எப்படி இருக்கு? - போனில் நலம் விசாரித்த நாகசைதன்யா... - தவித்துப்போன சமந்தா...! தீயாய் பரவும் தகவல்

Samantha Naga Chaitanya
By Nandhini Nov 04, 2022 09:30 PM GMT
Report

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு போனில் தொடர்பு கொண்டு நாகசைதன்யா நலம் விசாரித்துள்ள செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -

நடிகை சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

samantha-naga-chaitanya

நலம் விசாரித்த நாகசைதன்யா -

இந்நிலையில், சமந்தாவிற்கு முன்னாள் கணவர் நாகசைதன்யா போன் செய்து நலம் விசாரித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உன் உடம்பு எப்படி இருக்கு? என்று போனில் நலம் விசாரித்த நாகசைதன்யாவிடம் ஒரு கணம் சமந்தா பேச முடியாமல் தவித்துபோனதாக கூறப்படுகிறது. இத்தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

சமந்தாவை மறக்காத நாகசைதன்யா 

சமந்தாவை விட்டு பிரிந்தாலும் இன்று வரை நாகசைதன்யா அவரைப் பற்றி தரக்குறைவாக பேசியது கிடையாது. அதேபோல் சமூகவலைத்தளங்களில் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் நீக்கியது கூட கிடையாது.

இதற்கிடையே சமந்தாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக முன்னாள் மாமனாரான நாகர்ஜுனா தெரிவித்திருக்கிறார். மேலும், சமந்தா எங்கள் வீட்டை விட்டுச் சென்றாலும் அவர் என்றுமே எங்கள் மகள் தான் என்று நாகர்ஜுனா கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து வாழும்படி சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சமந்தா, ஓய்வு எடுக்காமல் யசோதா பட வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.