உடல்நலம் பெற வேண்டி பழனி முருகன் கோவில் 600 படிகளில் கற்பூரம் ஏற்றி சமந்தா வழிபாடு...!
நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது. இதன் பின்பு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பிறகுமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் நாடு திரும்பினார்.
நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் வழிபாடு
இந்நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் உடல் நலம் பெற வேண்டி வழிபாடு செய்தார். பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி அவர் வழிபாடு நடத்தினார்.
படி வழி பாதையில் நடந்து சென்ற நடிகை சமந்தா 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி, பழனி மலை கோவிலுக்குச் சென்றார். இதன் பிறகு, ஆனந்த விநாயகரை வணங்ய நடிகை சமந்தா ராஜ அலங்காரத்தில் இருந்த பால தண்டாயுத பாணியையும் தரிசனம் செய்தார்.
நடிகை சமந்தாவுடன் 96 இயக்குநர் பிரேம் குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். இதைப் பார்த்த கோவிலில் இருந்த ரசிகர்கள் நடிகை சமந்தாவிடம் நீங்கள் குணமடைந்து விடுவீர்கள், நம்பிக்கையுடன் இருங்கள் என்று ஆறுதல் கூறினர்.
நடிகை சமந்தா பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Our @Samanthaprabhu2 performed Pooja at the Palani Murugan temple.. She walked up the 600 steps by lighting ?
— Samantha FC || TWTS™ (@Teamtwts2) February 13, 2023
I hope you get everything you’ve been wishing for. You deserve it. ❤️??#SamanthaRuthPrabhu pic.twitter.com/TYY5TuPXP8