அரிய வகை நோய் பாதிப்பால் பல கோடியை இழந்த சமந்தா... - வெளியான தகவல் - சோகத்தில் ரசிகர்கள்..!
அரிய வகை நோய் பாதிப்பால் நடிகை சந்தா பல கோடியை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களியே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -
சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் பின்பு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பிறகுமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் நாடு திரும்பினார்.
அப்போது, விமான நிலையத்தில் நடிகை சமந்தா நடந்து வந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் இது சமந்தா இல்லை.அவரது முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. பழைய சமந்தா இல்லை என்று வேதனைப்பட்டனர்.
பல கோடியை இழந்த சமந்தா
இந்நிலையில், நடிகை சமந்தா குறித்த தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய்யால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, கடந்த 2 மாதங்களாக எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் 12 விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
இதன்மூலம் சமந்தாவிற்கு ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் நடிகை சமந்தாவுக்கு பேசப்பட்ட சினிமா வாய்ப்புகளும், மற்ற நடிகைகளுக்கு செல்வதாக சொல்லப்படுகிறது. இதனால் சமந்தாவின் எதிர்காலத்தை நினைத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.