கண்ணீரில் நடிகை சமந்தா; பிரபல நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங் - திடீர் முடிவுக்கு இது தான் காரணமா?
நடக்க முடியாமல் அவதிப்பட்டு வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தாவின் மனதை மேலும் ஒரு சம்பவம் நோக அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நோயுடன் போராடும் சமந்தா
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,
அவரின் உடல்நிலையில் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி தீயாக பரவியது.
இதுகுறித்து நடிகை சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சமந்தா மருத்துவமனையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதால் அவர் வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யாவால் மன உளைச்சல்
இப்படி அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவிற்கு மேலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஜோடியாக இருந்து வந்த சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது.
இதையறிந்த நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கதில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை அகற்றியதாக கூறப்படுகிறது. இது உண்மையான தகவலா என்பது இதுவரை தெரியவில்லை.