திடீர் மும்பை விசிட் ; பாலிவுட் ஸ்டாருடன் நடிகை சமந்தா..வைரலாகும் புகைப்படங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்
தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வெப் சீரிஸின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள சமந்தா மும்பை சென்றுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் வெளியான 'தி பேமிலி மேன் ' வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் தென்னிதியாவை கடந்து இந்திய அளவில் அறியப்பட்டார்.
ராஜி என்ற கதாபாத்திரத்தில் தன் அருமையான நடிப்பை வெளிபடுத்தியிருந்த அவருக்கு இந்தியா முழுவதும் ‘தி பேமிலி மேன் 2’ பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இந்த சீரிஸ் மூலம் பாலிவுட்டில் களமிறங்கிய சமந்தாவிற்கு ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வருகின்றன.
இந்நிலையில் சமந்தா மீண்டும் பேமிலி மேன் சீரிஸ் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே-வுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
‘சிட்டாடல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சமந்தாவுடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் இந்த சீரிஸைத் தயாரிக்கின்றனர்.
தற்போது இந்த சீரிஸின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள சமந்தா மும்பை சென்றுள்ளார். அங்கு அவர் நடிகர் வருன் தவானை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.