சமந்தாவிற்கு மாறாத கர்ப்பகால ஆசை - ஆனால் ஏன் விவாகரத்து? ரசிகர்கள் சோகம்

samantha pregnancy divorce dream desire
By Nandhini Jan 28, 2022 06:07 AM GMT
Report

சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த சமந்தா, பிரசவத்தின் போது பெண்கள் மிகவும் வேதனையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதன் முடிவில், எல்லா வலிகளையும் மறந்து, தன் குழந்தையைப் பார்த்து புன்னகை செய்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்த சமந்தாவும், நாகசைதன்யாவும் கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தார்கள்.

இந்த விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதில் இருந்து வெளியே வந்து சினிமாவில் தங்களுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், சமந்தா முன்பு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் "பெண்கள் உண்மையில் வலிமையானவர்கள். உலகில் மிகவும் வேதனையான ஒன்று பிரசவம். பிரசவத்தின் போது பெண்கள் மிகவும் வேதனையை அனுபவிக்கிறார்கள்.

ஆனால் அதன் முடிவில், எல்லா வலிகளையும் மறந்து, தன் குழந்தையைப் பார்த்து புன்னகைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். விவாகரத்துக்கு முன்னர் குழந்தை பெறுவதற்காக சமந்தா திரைத்துறையிலிருந்து சிறுது காலம் ஒதுங்கி இருக்கப்போவதாக தகவல் வெளியானது.

அதோடு கணவன்-மனைவி இருவரும் குழந்தைக்காக பல வழிபாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இருவரும் விவாகரத்து செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்தில், சமந்தாவின் தோழி ஒருவர், குழந்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று என்னிடம் பலமுறை கூறினார். ஆனால், சமந்தா கணவரை விவாகரத்து செய்துள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.