‘‘நுண்சிலை செய்திடும் பொன் சிலையே , பென்சிலை சீவிடும் பெண் சிலையே ’’ : நீர்வீழ்ச்சியை வேடிக்கை பார்க்கும் சமந்தா ,வைரலாகும் புகைப்படம்
கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நின்றபடி போஸ் கொடுக்கும் நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா(Samantha). தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடித்துள்ளனர்.
சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையினை பொறுத்தவரை நாகை சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
இந்த நிலையில் சமந்தா சமீப காலமாகவே நேரங்களை எல்லாம் சுற்றுலா செல்ல பயன்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சமந்தா விசிட் அடித்துள்ளார்.
அதில் ஒரு மலைக்குன்றின் மேல் நின்று சமந்தா தந்த போஸ்தான் தற்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. சிகப்பு நிற உடையில் சமந்தா பதிவிட்ட பதிவானது கிட்டதிட்ட 18 லட்சம் லைக்ஸை தாண்டி இன்ஸ்டகிராமில் வைரலாகிவருகிறது.