அவதூறாக செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா?

samandha-cinema-case
By Nandhini Oct 21, 2021 03:51 AM GMT
Report

தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்திருந்தார். நாக சைதன்யாவும் சமூகவலைத்தளத்தில் அதே அறிக்கையை வெளியிட்டார்.

இதனையடுத்து, சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட கூடாது என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பியதாக சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக தவறாகப் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

அவதூறாக செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா? | Samandha Cinema Case