ரூ.1000 கோடி கொடுத்தாலும் நான் வரவே மாட்டேன்..மறுப்பு தெரிவித்த பிரபல நடிகர் - தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்

Bigg Boss Salman Khan
By Nandhini Aug 30, 2022 09:09 AM GMT
Report

ரூ.1000 கோடி கொடுத்தாலும் நான் வரவே மாட்டேன் என்று பிரபல நடிகர் மறுப்பு தெரிவித்ததால் பிக்பாஸ் குழு தற்போது தொகுப்பாளரை மாற்ற முடிவு செய்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 15

இந்தி திரையுலகத்தில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். முதன் முதலாக இந்தியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தான் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன.

சல்மான்கான் சம்பளம்

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் மட்டுமே முடிந்திருக்கின்றன.

கடந்த பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. தற்போது விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி 16-வது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த 16வது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கானிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிக்பாஸ் 16-வது சீசனை தொகுத்து வழங்க நான் வரவில்லை என்று சல்மான்கான் கூறியுள்ளார்.

BigBoss - Salman Khan

வர மறுத்த சல்மான்கான்

அப்போது அவரிடம் மீண்டும் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர் 1000 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதால் பிக்பாஸ் குழுவினர் கலக்கம் அடைந்தனர். பின்னர் இதற்கு ஓகே சொல்லி உள்ளது பிக்பாஸ் குழு.

ஆனாலும், சல்மான் கான் வர மறுப்பு தெரிவித்ததால், தற்போது அவருக்கு பதில் வேறு தொகுப்பாளரை களமிறக்க பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதாம்.

இதனையடுத்து, பிரபல இந்தி இயக்குனர் ரோகித் ஷெட்டியிடம் இதுகுறித்து பிக்பாஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.