கூட பிறந்த தம்பியை திருமணம் செய்த அக்கா - காதலனுடன் சேர்ந்து கணவனாகிய தம்பியை கொலை செய்த மனைவி!!
சேலம் அருகே காதலனுடன் சேர்ந்து கணவனை தலையணையால் அழுத்தி கொலை செய்த மனைவியின் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பிரபு அங்குள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த அக்கா ஷாலினியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு பிரபு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில மர்மநபர்கள் வீடு புகுந்து கணவனை கொலை செய்து விட்டு நகையை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக புகார் அளித்தார்.

இதில் மேலும், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஷாலினிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதும், அதற்கு கணவன் இடையூறாக இருப்பதால், காதலருடன் ஒன்றாக இணைந்து பிரபு தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி மூச்சு திணற திணற கொலை செய்துள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan