சேலம் அருகே பரபரப்பு - அரசுப்பள்ளி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

suicide salem பரபரப்பு student-commits சேலம் மாணவர் தூக்கிட்டு-தற்கொலை
By Nandhini Mar 28, 2022 09:50 AM GMT
Report

சேலம் மாவட்டம், கரியகோயில் செங்காடுபுத்தூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் ஒரு கூலி தொழிலாளி.

இவருக்கு தினேஷ்(16) என்ற மகன் உள்ளார். தினேஷ் ஆத்தூரில் உள்ள ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

அங்குள்ள அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக விடுதி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். விடுதி வார்டன் அழகானந்தம் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். தினேஷ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபினவ், ஆத்தூர் ஆர்.டி.ஓ சரண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுதியில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே பரபரப்பு - அரசுப்பள்ளி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை | Salem Student Commits Suicide