பாதுகாவலர் இல்லாமல் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர் - இரவில் பரபரப்பு!

Tamil nadu Salem
By Jiyath Apr 04, 2024 03:46 AM GMT
Report

மாவட்ட ஆட்சியர் 

சேலம் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் பிருந்தா தேவி. இவர் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல புறப்பட்டார். அப்போது தனது கார் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியே நடக்க ஆரம்பித்தார்.

பாதுகாவலர் இல்லாமல் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர் - இரவில் பரபரப்பு! | Salem Collector Walked Without A Bodyguard

உடனே அவரது கார் மெயின் கேட் அருகே வந்து நின்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் "நீங்க ஏம்பா வந்தீங்க நான் நடந்தே போய்கிறேன்’ என்று கூறிவிட்டு வள்ளுவர் சிலை வரை நடக்கத் தொடங்கினார்.

விளக்கம் 

அவரது காரில் டீசல் இல்லாததால், அதனை நிரப்புவதற்காக கார் ஓட்டுநர், குமாஸ்தா, முதன்மை பாதுகாவலர் ஆகியோர் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வள்ளுவர் சிலையிலிருந்து சுகனேஸ்வரர் கோயில் வரையிலும் மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று கோயிலுக்குள் தரிசனத்திற்கு சென்றார்.

பாதுகாவலர் இல்லாமல் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர் - இரவில் பரபரப்பு! | Salem Collector Walked Without A Bodyguard

பின்னர் மீண்டும் தனது காரில் ஏரிச் சென்றார். இதுதொடர்பாக பேசிய அவர் "எப்போதும் நடந்து தான் கோயிலுக்கு செல்வேன். இறங்கி வந்தபோது கார் இல்லை. அதனால் நான் காரை எதிர்பார்க்கவில்லை. நடந்தே செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.