இன்று முதல் அமுதம் பல்பொருள் அங்காடியில் துவரம் பருப்பு விற்பனை..!
Government of Tamil Nadu
By Thahir
சென்னையில் இன்று முதல் அமுதம் பல்பொருள் அங்காடியில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.
இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை
சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு ரூ.60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.