சினிமாவை விட்டு விலகும் சாய்பல்லவி.. ஏற்பாடுகள் மும்முரம்!
நடிகை சாய் பல்லவி சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவி
மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்”திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. அதில் நடித்த கதாபாத்திரமான மலர் டீச்சர் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார். சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர்,
தீ 5, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற தென்னிந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழில் தனுஷின் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மருத்துவம்
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்து வெளியான கார்கி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பும் பாராட்டுகளை குவித்தது.
இந்நிலையில், இவர் பட வாய்ப்புகளை மறுத்து வருவதாக கூறப்படுகிறது. ஜார்ஜியாவில் தனது மருத்துவ படிப்பை முடித்த சாய் பல்லவி தற்போது அந்த பணியில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறாராம் அதில் கவனம் செலுத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்லது. ஆனால் இதுகுறித்த அவர் தரப்பில் தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.