யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது - சாய்பல்லவி செய்த செயல்!

Sai Pallavi Tamil nadu Viral Photos
By Sumathi Sep 05, 2022 09:23 AM GMT
Report

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகை சாய் பல்லவி குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

 சாய்பல்லவி

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்”திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. அதில் நடித்த கதாபாத்திரமான மலர் டீச்சர் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார்.

யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது - சாய்பல்லவி செய்த செயல்! | Sai Pallavi Darshanam At Chidambaram

சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர்,தீ 5,உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற தென்னிந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழில் தனுஷின் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சாமி தரிசனம்

டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ள சாய்பல்லவி, விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் உடனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது - சாய்பல்லவி செய்த செயல்! | Sai Pallavi Darshanam At Chidambaram

இவ்வாறு முன்னிலையில் வலம் வரும் சாய் பல்லவி குடும்பத்தினருடன் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். யாரும் அவரை அடையாளாம் கண்டு விடக்கூடாது என்பதற்காக முகக் கவசத்துடன் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார்.

நடிகை சாய் பல்லவி கோயிலுக்கு வந்திருந்த செய்தி அறிந்து ஏராளமான பக்தர்கள் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். போலீசார் உதவியுடன் சாமி தரிசனம் முடித்து அவர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.