தெரியலன்னா... சும்மா இரு.... - சாய்பல்லவியை விளாசிய பிரபல நடிகை - வைரலாகும் டுவிட்

Sai Pallavi
By Nandhini Jun 18, 2022 12:40 PM GMT
Report

நடிகர் ராணா - நடிகை சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘விரத பர்வம்’. இப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் நக்சலைட்டுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ளார். 

சாய்பல்லவி பேட்டி

சமீபத்தில் விரத பர்வம் படம் குறித்து செய்தியாளர்கள் பேட்டியில் சாய்பல்லவி பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவரா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அந்த சாய்பல்லவி கூறுகையில்,

நான் நடுநிலையான குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் எது சரி, எது தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடியாது.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டியுள்ளனர். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற நபர் ஒரு இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக அவரை தாக்குகிறார்கள். அந்த நபர் கொலை செய்யப்பட்டவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர்.

காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும், வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது. நான் நடுநிலையானவள். பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள், சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களை தாக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சாய் பல்லவி பேசும் அந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி மீது புகார்

சாய் பல்லவியின் பேச்சுக்கு ஆதரவும், கண்டனங்களும் எழுந்து வருகிறது. இதனிடையே காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசிய சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தெரியலன்னா... சும்மா இரு.... - சாய்பல்லவியை விளாசிய பிரபல நடிகை - வைரலாகும் டுவிட் | Sai Pallavi

விஜயசாந்தி கண்டனம்

இந்நிலையில், பிரபல நடிகையும், எம்பியுமான விஜயசாந்தி சாய்பல்லவியை விளாசு விளாசு என்று விளாசியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் கூறுகையில், பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்படுவதும் ஒன்றல்ல. நீ கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புரியும். ஒரு தாய் தன் மகனை தவறு செய்ததற்காக அடிப்பதும், ஒரு திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா? இப்பிரச்சனை குறித்து தெரியாவிட்டால் பேசாமல் இருப்பதே சிறந்தது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.