சாய் பல்லவிக்கு ரகசிய திருமணமா? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறுவயது முதல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சாய் பல்லவி 2008ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனையடுத்து, 2009ம் ஆண்டு இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் பின்பு, 2015ம் ஆண்டில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே சாய் பல்லவி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்நிலையில், சாய் பல்லவியின் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி இது தொடர்பாக பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், திருமணம் குறித்து பரவும் தகவல் உண்மை கிடையாது. நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருப்பதனால் அதிக படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. சாய் பல்லவி நடித்தால் நல்ல படமாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் தான் கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறினார். இதனையடுத்து, திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சாய் பல்லவி.