இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஸ்பான்ஸர் - சஹாரா குழும தலைவர் காலமானார்!
சஹாரா குழும தலைவர் சுப்ரதோ ராய் மாரடைப்பால் காலமானார்.
சுப்ரதா ராய்
சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் காலமானார். இது தொடர்பாக சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் "சுப்ரதா ராய் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்தது.
இதனால், கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு, உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு உள்பட பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு 10.30 மணியளவில் காலமானார். அவரது மறைவு, சஹாரா இந்தியா அமைப்பினருக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது.
சஹாரா இந்தியா
சுப்ரதா ராய், ஒரு வழிகாட்டி சக்தியாக, தலைவராக மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் ஊக்கம் அளித்தவராக இருந்தவர். அவருடைய இறுதி சடங்குகள் பற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை தொழில்முனைவோரான சுப்ரதா ராய், நிதி, ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து, ஊடகம், சுகாதாரம் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வணிக சாம்ராஜ்யத்தை வளர்த்தார். மேலும், சஹாரா குழு 11 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்தது. இதன் மூலம் இந்த குழுமம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகளின் தேவைக்காக இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் :கொக்கரிக்கும் விமல் வீரவன்ச IBC Tamil

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
