“மக்கள் வாழ்வில் வித்தியாசம் ஏற்படுத்தும் இவர்களை பார்த்தால் இதை செய்யுங்கள்” - சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி ட்வீட்
தன்னுடைய தோழியைக் காப்பாற்றிய போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சச்சின் டெண்டுல்கர் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.
"சில நாட்களுக்கு முன்பாக நெருங்கிய தோழி விபத்தில் சிக்கினார்.கடவுள் அருளால் அவர் இப்போது நன்றாக தேறி வருகிறார்.
ஆனால் அவர் பிழைத்ததற்கு போலீஸின் காலம் தவறாத உதவிதான் காரணம்" என்று அவருக்கு தன் டிவிட்டரில் நன்றி தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.
விபத்து நடந்த உடனே இந்த கான்ஸ்டபிள் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கடுமையாக காயமடைந்த அவரது முதுகுத்தண்டுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கச் செய்தார்.
அந்த கான்ஸ்டபிளை நேரில் சந்தித்து நான் நன்றி கூறினேன்.
அவரைப்போலவே நம்மில் பலர் இருக்கின்றனர், கடமையின் அழைப்புக்கப்பாலும் மனிதகுலத்துக்கு பணியாற்றுபவர்கள் இவர்கள்.
இவர்களை எங்காவது நீங்களும் பார்க்கக் கூடும் உடனே அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மக்கள் வாழ்க்கையில் வித்தியாசம் ஏற்படுத்துபவர்கள்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கும் சொல்கிறேன், டிராபிக் விதிமுறைகளை மதிப்போம்.
குறுக்கு வழிகளை நாட வேண்டாம். அடுத்தவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டு நம் உயிரைப் பாதுகாத்துக் கொள்வது மதிப்பாகாது" என்று சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.
A heartfelt thanks to all those who go beyond the call of duty. pic.twitter.com/GXAofvLOHx
— Sachin Tendulkar (@sachin_rt) December 17, 2021