உயிரைக் காப்பாற்றிய போக்குவரத்து போலீசார் - நன்றி தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

bcci viratkohli sachintendulkar souravganguly INDvSA
By Petchi Avudaiappan Dec 17, 2021 05:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

விராட் கோலி, கங்குலி விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் மவுனம் சாதிப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக விராட் கோலி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் பல வீரர்கள் கருத்து தெரிவித்த நிலையில் சச்சின் டெண்டுல்கர்  இதுவரை வாய் திறக்கவில்லை. இதனால் சச்சினுக்கு என்ன ஆனது , இல்லை மௌனத்திற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். 

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்று வந்ததை கண்டு ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்தனர். அவரின் நெருங்கிய தோழி ஒருவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், விபத்தில் காயமடைந்த தோழியை அங்கிருந்த போக்குவரத்து காவலர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சச்சின் தக்க நேரத்தில் உதவிய அந்த போக்குவரத்து காவலரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும் இது போன்ற அழகான மனிதர்களால் தான் உலகம் நிறைந்துள்ளதாக குறிப்பிட்ட சச்சின் அவர்களது அயராத பணிக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த பதிவில் நாடு முழுவதும் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள சச்சின் மக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.