தேசிய அடையாளமா? சச்சினுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அதிகாரங்கள் என்னென்ன?
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு என்னென்ன அதிகாரங்கள் அளிக்கப்பட்டது என்பதை தற்போது காணலாம்.
தேசிய அடையாளம் சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட் வரலாற்றில் கடவுள் என போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவர் கடந்த 2012-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது வரை அவரின் புகழ் கிரிக்கெட் உலகில் இருந்து சற்றும் குறையவில்லை.
அவருக்கு இந்திய அரசு ராஜ்யசபா பதவி வழங்கி கவுரவித்தது. அதனை தொடர்ந்து அவர் பல தனியார் நிறுவனங்களின் தூதரக இருந்து வருகின்றார். இந்நிலையில் தான் அவரை தற்போது இந்திய தேர்தல் ஆணையம், தேசிய அடையாளமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பாக பார்க்கப்டும் இந்த பதவி தற்போது சச்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
என்னென்ன அதிகாரங்கள் உள்ளன?
தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், எவ்வாறு தேர்தல் அரசியலை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த பிரச்சாரங்களை மேற்கொள்ளவே தற்போது சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா என 5 மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலங்களில் சச்சின் நேரடியாக சென்று தேர்தல் குறித்து பரப்புரைகள் மேற்கொள்ளலாம் என்பதற்கு சான்றாகவே இந்த பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.