முதல் ஆளாக வாழ்த்து சொன்ன தனுஷ்...ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு இன்னும் எதுவும் சொல்லாமல் மவுனம் - காத்திருப்பில் ரசிகர்கள்..!

Dhanush Aishwarya Rajinikanth Selvaraghavan
By Thahir May 06, 2022 02:44 PM GMT
Report

நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் சாணிக் காயிதம்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன்.அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சாணிக் காயிதம் படம் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.கடந்த 2020 ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.இதையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிவடிந்துள்ளது. அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான ராக்கி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘சாணிக் காயிதம்’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது தனுஷ் தனது அண்ணன் நடித்துள்ள படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அருண் மாதேஸ்வரனை தொலை நோக்கு பார்வை கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படம் ஒன்று நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவனின் சாணிக் காயிதம் பட போஸ்டருக்கு எல்லாம் வாழ்த்து தெரிவித்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட வெளியான நிலையில் எந்த பதிவையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சாணிக் காயிதம் திரைப்படக் குழுவினரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். தனுஷ் ட்வீட் போட்ட நிலையில் ஐஸ்வர்யா எப்போ வாழ்த்து போடுவார் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா ஐஸ்வர்யா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.