#29yearsofvijayism: விஜய்யின் தந்தை என்பதில் பெருமை! எஸ்ஏ சந்திரசேகர் உருக்கம்

By Fathima Dec 04, 2021 10:07 AM GMT
Report

பெருமைமிக்க ஒரு தந்தையாக தன்னை உணர்வதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.

1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி விஜய்யின் நடிப்பில் உருவான நாளைய தீர்ப்பு வெளியானது, இன்றுடன் 29 ஆண்டுகளை கடந்து விஜய் 30வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

இதனை அவரது ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

அதில், விஜய்யை நாளைய தீர்ப்பு படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்தேன், அன்றே விஜய் மிகப்பெரிய உயரம் தொடுவார் என தெரியும்.

படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டே உள்ளார், எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் என்ற நிலை மாறி விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்ற பெருமையுடன் உள்ளேன். பெருமைமிக்க ஒரு தந்தையாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலுக்கு வருவது தொடர்பில் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.