பல கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஷாருகான்...? - வெளியான தகவல்.. - மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!
பல கோடி பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் நடிகர்கள் விஜய் - ஷாருகானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் ‘தளபதி - 67’
‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
‘பதான்’ படம்
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த ஜனவரி 25ம் தேதி ‘பதான்’ படம் இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் வெளியானது.
இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்புக்களை தாண்டி ‘பதான்’ படம் சுமார் ரூ.700 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - ஷாருகான்...?
இந்நிலையில், பிரமாண்ட இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருவபர் இயக்குநர் ஷங்கர். இவர் தற்போது சுமார் ரூ.900 கோடி பட்ஜெட்டில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் எடுக்கப்போகும் படம் 2 ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், ஷாருக்கான் மற்றும் விஜய் தற்போது பிசியாக இருப்பதால் அவர்களிடம் இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து 'ஆர்சி 15' படத்தையும், நடிகர் கமல்ஹாசனை வைத்து 'இந்தியன் 2' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் பணிகளும் நிறைவடைந்தவுடன் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து படமெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தால் வசூல் சாதனையில் மாபெரும் சாதனை படைத்துவிடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.