ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் - ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த எஸ்.பி வேலுமணி - வைரல் வீடியோ...!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 25ம் தேதி மாலையோடு நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரோடு இடைத்தேர்தல் தற்போது கடும் பரபரப்பில் உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலையொட்டி, மாதிரி ஓட்டுப்பதிவு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடந்தது.
ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி வேலுமணி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஈரோடு கிழக்கு தொகுதிகுட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒயிலாட்டம் ஆடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரித்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#ஈரோடு கிழக்கு தொகுதிகுட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒயிலாட்டம் ஆடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். pic.twitter.com/qXvp6Sfkuh
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) February 20, 2023