முடிவுக்கு வராத யுத்தம் : கார்கிவ் -போலீஸ் தலைமையகம் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் ராணுவமும் கடுமையாக எதிர்த்து போரிட்டு வருகிறது. 2வது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் இன்றுடன் 7வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
கார்கிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைய சதுக்க கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் தாம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க மூலக்காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்கிவ் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .ரஷ்ய ராணுவம் .நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில்
கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ரஷ்ய வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.