உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு முயற்சி

UkraineRussiaWar RussiaUkraineWar StudentRecover IndiaStudents TakeActionIndia
By Thahir Feb 25, 2022 10:51 AM GMT
Report

உக்ரைன் மீது இரண்டாவது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டில் பதற்றமான சூழுல் நிலவி வருகிறது.

உக்ரைனில் கல்வி மேற்படிப்புக்காக சென்ற மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு முயற்சி | Russia Ukraine War Student Recover Action India

இதையடுத்து தமிழக மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய,மாநில அரசுகள் மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்து வருகின்றனர்.

நேற்று இந்தியர்களை அழைத்து வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் வான் பகுதி மூடப்பட்டதால் திரும்பியது.

இதனிடையே மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

உக்ரைனில் உள்ள சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் ருமேனியா செல்விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.