ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்கள் முடக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை கடந்த 24-ந் தேதி தொடங்கி நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யா மீது பல தடைகள் விதித்தாலும் கண்டுகொள்ளாமல் தனது தாக்குதலை தொடர்கிறது.
அமெரிக்கா,கனடா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இருந்த போதும் எதையும் கருத்தில் கொள்ளாத ரஷ்யா எந்த தடைகள் விதித்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தனது தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என சமூக வளைதலங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடைய ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதள பக்கம் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.