‘’ ரஷ்யாவை அவ்வுளவு சீக்கிரம் நம்ப முடியாது ‘’ : ரஷ்யா மேல் கண் வைக்கும் அமெரிக்கா ?

ukrainerussia RussiaUkraineCrisis
By Irumporai Feb 17, 2022 03:39 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது .

உக்ரைனின் 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

‘’ ரஷ்யாவை அவ்வுளவு சீக்கிரம் நம்ப முடியாது ‘’  :  ரஷ்யா மேல் கண் வைக்கும் அமெரிக்கா ? | Russia Ukraine Crisis Putin Jobiden

ரஷ்யாவால் உக்ரைனை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க்கா எச்சரிக்கை விடுத்தது. இந்த போர் பதற்றம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் பைடன் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லையில் குவித்திருந்த படையில் ஒருபகுதியை திடீரென திரும்பப் பெற்றது. ரஷ்யாவின் இந்த திடீர் முடிவால் தாக்குதல் முடிவை ரஷ்ய அதிபர் புதின் மாற்றிக் கொண்டுவிட்டார் என கருதிய நிலையில், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இதை நம்ப மறுத்துள்ளன. 

பெலாரஸ் எல்லை, கருங்கடல் பகுதிகளில் ரஷ்ய ராணுவமும், கடற்படையும் போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன. குறிப்பிட்ட அளவு படையை மட்டும் திரும்ப பெற்றுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம்,’ என்று அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

‘’ ரஷ்யாவை அவ்வுளவு சீக்கிரம் நம்ப முடியாது ‘’  :  ரஷ்யா மேல் கண் வைக்கும் அமெரிக்கா ? | Russia Ukraine Crisis Putin Jobiden

ஆனால் , இந்த விவகாரம் குறித்து அதிபர் புதின்  கூறுகையில், `ராணுவ வீரர்களின் பயிற்சி முடிந்ததால் முகாம்களுக்கு திருப்பி அனுப்பினோம். உக்ரைன் விவகாரம் பற்றி அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் நம்பிக்கையூட்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ரஷ்யா போரை விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால்,  பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா கூறி வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் .

உக்ரைனில் போர் வெடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம். உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால் கடுமையான பதிலடி கொடுப்போம்.

‘’ ரஷ்யாவை அவ்வுளவு சீக்கிரம் நம்ப முடியாது ‘’  :  ரஷ்யா மேல் கண் வைக்கும் அமெரிக்கா ? | Russia Ukraine Crisis Putin Jobiden

ரஷ்ய படைகள் வெளியேறி விட்டதாக ரஷ்யா கூறும் தகவலை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யா தனது படைகளை திரும்ப பெறுவதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் போர் படைகள் உக்ரைனில் இருந்து வெளியேறியதை  ஒரு போர் தந்திரமாகவே உற்று நோக்குகிறது அமெரிக்கா . இதனால், உக்ரைனில் போர் பதற்றம் தணியாமல் உள்ளது. உக்ரைனில் மீண்டும் அமைதி நிலவுமா ? அதற்கான பதிலை இனிவரும் காலங்கள்தான் கூற வேண்டும்.