குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் பகுதியை ரஷ்யா நாட்டு படைகள் கைப்பற்றும் நோக்கில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் அந்நாட்டில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கல்வி பயில உக்ரைன் நாட்டிற்கு ஏராளமான இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு ஆப்ரேசன் கங்காவின் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது.
உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்குள்ள மாணவர்கள் தாயகம் திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைபாடு குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி விளக்கியதாக தகவல்.
பிரதமர் - குடியரசுத் தலைவர் சந்திப்பின் போது உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.