உக்ரைன் மக்களோடு மக்களாக கலந்து தாக்க தயாரான ரஷ்யா வீரர்கள் - வெளியான திடுக்கிடும் தகவல்

RussiaUkraineCrisis RussiaUkraineWar UkraineAttack LeakedImportantUpdates
By Thahir Mar 02, 2022 07:31 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா 7 வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மக்களோடு ரஷ்யா ராணுவ வீரர்கள் கலந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் தலைநகரான கார்கிவ் பகுதியை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தனது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைன் மக்களோடு மக்களாக கலந்து தாக்க தயாரான ரஷ்யா வீரர்கள் - வெளியான திடுக்கிடும் தகவல் | Russia Ukraine Crisis Leaked Important Information

இதனால் அந்நாட்டை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறி வருகிறன்றனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்களோடு மக்களாக ரஷ்யா படையினர் கலந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

காடுகள் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து சாதரணமாக ரஷ் யா வீரர்கள் உலா வருவதாகவும், ரஷ்யா ராணுவ வீரர்கள் போருக்கு முன்பே மக்களோடு மக்களாக கலந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் உக்ரைனில் உள்ள பாலங்கள் வழியாக ரஷ்யா நாட்டு ராணுவ வீரர்கள் ஊடுருவி வருவதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் மக்களோடு மக்களாக கலந்து தாக்க தயாரான ரஷ்யா வீரர்கள் - வெளியான திடுக்கிடும் தகவல் | Russia Ukraine Crisis Leaked Important Information

ரஷ்யா ராணுவத்தினர் நுழைவதை தடுக்க உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில் பாலங்கள் தகர்க்கும் முயற்சியில் உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலகம் மீது ரஷ்யா படை தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கெர்சன் நகரை ரஷ்யா படையினர் முழுவதுமாக கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு,112 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. 

You May Like This