உக்ரைனில் இருந்து 17,000 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு - ஒன்றிய அரசு தகவல்
RussiaUkraineCrisis
RussiaUkraineWar
IndianPeopleRescue
By Thahir
உக்ரைன் மீது ரஷ்யா 9-வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் அந்நாட்டில் குண்டு மழைகள் பொழிந்து வருகிறது.
இதனால் குடியிருப்பு பகுதிகளும் போருக்கு சின்னாபின்னமாகி உள்ளது. போர் நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு மீட்டு வருகிறது.
இது குறித்து ஒன்றிய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் உள்ள 7,000 இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.