பாலம் இடிந்து விழுந்ததில் கவிழ்ந்த ரயில் - 7 பேர் பலி
ரயில் பால விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் விபத்து
மாஸ்கோவிலிருந்து கிளிமோவ் நோக்கி ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ரயில் வைகோனிச்ஸ்கி என்ற இடத்தில் விபத்தில் சிக்கி உள்ளது.
ரஷ்யாவின் மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், டிரைவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
7 பேர் பலி
மேலும் 30 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது விபத்து நடந்த பகுதி உக்ரைனுக்கு அருகே உள்ள பகுதி என்பதால்,
இச்சம்பவம் சதிச்செயலாக் இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.