திருமணம் வேண்டாம்...தெறித்து ஓடிய மாப்பிள்ளை - துரத்தி பிடித்த மணப்பெண்

Marriage Bihar
By Thahir Aug 30, 2022 12:39 PM GMT
Report

மண கோலத்தில் மாப்பிள்ளை திருமணம் வேண்டாம் எனக் கூறி நடு ரோட்டில் ஓட்டம் பிடிக்கவே மணப்பெண் அவரை துரத்தி பிடித்தார்.

திருமணத்திற்கு மறுப்பு

பீகார் மாநிலம் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.  இதையடுத்து வரதட்சணையாக பைக் மற்றும் ரூ.50,000 ஆயிரம் ரொக்க பணம் கொடுத்துள்ளனர்.

அந்த இளைஞர் திருமண தேதியை தள்ளிபோடுமாறு கூறியுள்ளார்.இதை கேட்ட அவரது பெற்றோர் மற்றும் பெண் வீட்டார் திருமண தேதியை தள்ளி போட்டுள்ளனர்.

பின்னர் திருமண தேதி நெருங்கவே திருமணத்தை தாமதப்படுத்துமாறு இளைஞரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளைஞருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தனது பெற்றோருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு தன்னை கட்டிக்க போகும் மாப்பிள்ளையை பார்த்த அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை 

இதனால் அந்த பகுதியில் மக்கள் திரளவே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மாப்பிள்ளையை விடாமல் துரத்தியுள்ளார்.

திருமணம் வேண்டாம்...தெறித்து ஓடிய மாப்பிள்ளை - துரத்தி பிடித்த மணப்பெண் | Runaway Groom Chased Bride

பின்னர் ஒருவழியாக மாப்பிள்ளையை பகத் சிங் சவுக்கில் வளைத்து பிடித்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கவே அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாப்பிள்ளை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே இருவருக்கும் திருமணம் கோவிலில் நடைபெற்றது.

திருமணம் வேண்டாம்...தெறித்து ஓடிய மாப்பிள்ளை - துரத்தி பிடித்த மணப்பெண் | Runaway Groom Chased Bride

நடுரோட்டில் மணமகனை, மணப்பெண் துரத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.