நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு : காரணம் என்ன ?

BJP
By Irumporai Nov 05, 2022 06:45 AM GMT
Report

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி 

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தப்படும் என அறிவித்தது , ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பேரணி மறுக்கப்பட்டது.

நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு : காரணம் என்ன ? | Rss Rally Scheduled For Tomorrow Postponed

இதனை தொடர்ந்து ஆர் .எஸ் .எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் தமிழகத்தில் காவலதுறையின் நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்தலாம் என்றும் உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்தது.

பேரணி ஒத்திவைப்பு

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் நாளை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற இருந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றம் தனது தீர்ப்பில் மைதானம் அல்லது உள்ளரங்குகளில் பேரணி நடத்தி கொள்ளலாம் என்ற நீதி மன்ற நிபந்தனையினை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உச்சநீதி மன்றத்தை நாட உள்ளதாக கூறியுள்ளது.