தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

By Irumporai Nov 04, 2022 10:28 AM GMT
Report

 தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்வலத்திற்கு அனுமதி

அக்டோபர் 2- ம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல் துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் , நவம்பர் 6-ம் தேதி ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும் , அதற்கான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல் துறைக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகள் மனித சங்கிலிக்கு அனுமதி கோரியதால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

நீதிமன்றம் உத்தரவு

ஆனால், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கேட்பதால் அவர்களுக்கு வழங்க முடியாது. உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆர்எஸ்எஸ் தரப்பினர் மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வாதிடப்பட்டிருந்தது.

   தற்போது அனுமதி வழங்கப்படாத 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் எனவும், இந்த இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.