இனி சாலையில் ஹெட்செட் மாட்டி வாகனம் ஓட்டினால் அபராதம் - போலீசார் அதிரடி!

India Andhra Pradesh
By Jiyath Jul 27, 2023 07:41 AM GMT
Report

வாகன ஓட்டிகள் இனி சாலையில் ஹெட்செட் அணிந்திருந்தாள் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

சாலை விபத்துகள்

வாகனங்களில் செல்பவர்கள் கழுத்தில் ஹெட்செட் அணிந்து செல்வதை வழக்கமாக செய்து வருகிறார்கள். சாலையில் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசுவதற்கும், பாடல்கள் கேட்பதற்கும், சிலர் ஸ்டைலுக்காகவும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு செல்கிறார்கள்.

இனி சாலையில் ஹெட்செட் மாட்டி வாகனம் ஓட்டினால் அபராதம் - போலீசார் அதிரடி! | Rs 20000 Fine For Driving With Earphones Ibc

வாகன ஓட்டிகள் ஹெட்செட் அணிந்து செல்வதால் ஹாரன் அடிப்பது அவர்களுக்கு கேட்பதில்லை.  இதனால் பெரும் விபத்துகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் ஆந்திர போலீசார் நடத்திய ஒரு ஆய்வில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

ரூ.2000 அபராதம்

அந்த அறிக்கையில் "இயர் போன், ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகமான அபராத தொகை விதிக்க வேண்டும் என்றும் இதனால் விபத்துகளை குறைக்க முடியும் என தெரிவித்திருந்தனர்.

போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்த அபராத நடவடிக்கை அமலுக்கு வருகிறது. பைக், கார், ஆட்டோ,பஸ் ஆகிய வாகனங்களில் செல்பவர்கள் இயர்போன் மாட்டி போன் பேசினாலோ அல்லது கழுத்தில் ஹெட்செட் மாட்டியிருந்தாலோ ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் எண்ணிக்கை குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.