ஒன் லாஸ்ட் சான்ஸ்.. ரூ.2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று தான் கடைசி நாள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செல்லாத நோட்டுகள்
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2000 நோட்டு அறிமுகமானது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும்,
அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மக்கள் அனைவரும் வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொண்டனர், இதற்காக வங்கியில் சொரப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.
கடைசி நாள்
இந்நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்பொழுது மக்கள் தங்களிடம் உள்ள 2000 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதேபோல் தங்களது வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்து வருகின்றனர்.
ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற இன்றே இறுதி நாளாக இருந்த நிலையில் அக்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இன்றைக்கு வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், ரூ.20,000 வரை மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மட்டுமே மாற்ற இயலும். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில், தனிநபரோ நிறுவனமோ இவ்வாறு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.