ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலின் துபாய் செல்ல நீதிமன்றம் அனுமதி...!
ரூ.200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஜாக்குலின் துபாய் செல்ல நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நடிகை ஜாக்குலின் துபாய் செல்ல நீதிமன்றம் அனுமதி
சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகை ஜாக்குலினின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். மேலும், நடிகை ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
சுகேசின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல திடுக்கிடும தகவல்களை தெரிவித்தார்.
சமீபத்தில், ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெப்சிகோ இந்தியா மாநாட்டில் பங்கேற்க துபால் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Rs 200 crore ED case: Court allows Jacqueline to travel to Dubai to attend PepsiCo India Conference
— ANI Digital (@ani_digital) January 27, 2023
Read @ANI Story | https://t.co/CoPM0d9FYY#jacquelinefernandez #Dubai #Pepsi pic.twitter.com/s8jLczAs1c