ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்... - போட்ட அதிரடி உத்தரவு...!

Rowdy Baby
By Nandhini Nov 30, 2022 01:10 PM GMT
Report

ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக்கை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா

டிக்டாக் மூலம் பிரபலமானவர்தான் ரவுடி பேபி சூர்யா (எ) சுப்புலட்சுமி. இவரும், அவரது நண்பர் சிக்காவும் சேர்ந்து ஆபாசமாக சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

இதனையடுத்து, ரவுடி பேபி சூர்யா தங்களை மிரட்டுவதாக கோவையை சேர்ந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், பல மாவட்டங்களிலிருந்து எழப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் சூர்யா மற்றும் சிக்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீது போலீசார் குண்டர் சட்டம் போடப்பட்டது.

rowdy-baby-surya-high-court-order

நீதிபதிகள் அதிரடி உத்தரவு

இந்நிலையில், பிரபல டிக்டாக்கர் ரவுடி பேபி சூர்யா, தன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில், சூர்யாவின் டிக்டாக் காட்சிகளைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது எந்த உத்தரவும் பிறக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டனர்.