தோனி அது செய்வது கஷ்டம்; நான் ரிஷப் பண்டை தான் அழைப்பேன்- ரோகித் சர்மா ஓபன் டாக்!

MS Dhoni Rohit Sharma Rishabh Pant IPL 2024
By Swetha Apr 18, 2024 08:03 AM GMT
Report

கிரிக்கெட் ஜாம்பவான் தோனி மற்றும் இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்து கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார் .

தோனி அது செய்வது கஷ்டம் 

நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 33வது போட்டியான லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மாவுக்கு இது 250வது போட்டி ஆகும். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தோனி அது செய்வது கஷ்டம்; நான் ரிஷப் பண்டை தான் அழைப்பேன்- ரோகித் சர்மா ஓபன் டாக்! | Rohit Sharma Talks About Dhoni And Rishabh Pant

ரோகித் சர்மா அபாரமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 261 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், கில்கிறிஸ்ட் மற்றும் வாஹன் இணைந்து நடத்தி வரும் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் ரோகித் சர்மா பங்கேற்று உரையாடினார்.

அதில் ஐபிஎல் தொடர் குறித்த விவாதத்தின் போது தோனியை பற்றிய பேச்சுகள் வந்தது.அப்போது பேசிய அவர், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்கும் போது தோனி களமிறங்கினார். அந்த 4 பந்துகளில் 20 ரன்களை விளாசி சென்றார்.

தோனியால் என் வாழ்க்கை மாறால நான் என்னென்ன பண்ணேன்னு தெரியுமா? - கொந்தளித்த ரோகித் சர்மா

தோனியால் என் வாழ்க்கை மாறால நான் என்னென்ன பண்ணேன்னு தெரியுமா? - கொந்தளித்த ரோகித் சர்மா

ரோகித் சர்மா ஓபன் டாக்

கடைசி பார்க்கும் போது தோனி சேர்த்த அந்த 20 ரன்கள் தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாக அமைந்தது. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்று தெரியாது. ஆனால் நிச்சயம் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன்.

தோனி அது செய்வது கஷ்டம்; நான் ரிஷப் பண்டை தான் அழைப்பேன்- ரோகித் சர்மா ஓபன் டாக்! | Rohit Sharma Talks About Dhoni And Rishabh Pant

ஏனென்றால் அண்மை காலங்களில் அதிகமாக கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். தோனியை சமாதானப்படுத்துவதை விடவும் தினேஷ் கார்த்திக்கை சமாதானம் செய்வது எளிது. கடந்த 2 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எந்த அணியின் கேப்டன் என்று தெரியவில்லை.

தினேஷ் கார்த்திக்கிடம் டி20 உலகக்கோப்பையில் விளையாட விருப்பமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு தினேஷ் கார்த்திக், எனது ஆட்டமே பதில் என்று கூறியுள்ளார். அதேபோல் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தான் என்னை சிரிக்க வைக்கும் ஒரே வீரர்.

தோனி அது செய்வது கஷ்டம்; நான் ரிஷப் பண்டை தான் அழைப்பேன்- ரோகித் சர்மா ஓபன் டாக்! | Rohit Sharma Talks About Dhoni And Rishabh Pant

அவர் விபத்தில் சிக்கிய பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தது சோகமளித்தது. தற்போது மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனக்கு நன்றாக சிரிக்க வேண்டும் என்று தோன்றினால், உடனடியாக அவருக்கு போன் செய்வேன் என்று பேசியுள்ளார்.