ரோகித் ஷர்மாவுக்கு திடீர் காயம்..? - தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கலா?

rohit sharma india vs south africa suffers injury before departure
By Swetha Subash Dec 13, 2021 01:00 PM GMT
Report

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்கிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஓமிக்ரானின் அச்சுறுத்தல் காரணமாக, தொடர் பயோ-பப்பிலில் இருக்கும்  இந்திய அணி சுற்றுப்பயணத்திற்கு செல்லும் முன்னே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா, மும்பையில் நடந்த பயிற்சியின் போது காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேப்டன் ரோகித் தனது அணி வீரர்களான அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் மதியம் ஷரத் பவார் அகாடமியில் நெட்ஸில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

இந்த பயிற்சியின் போது, ​​இந்தியாவின் த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகுவேந்திரா வீசிய பந்தை ரோகித் ஷர்மாவின் கையில் பட்டது.

அதன் பிறகு ரோகித் மிகவும் வேதனைப்பட்டார்’ என்று இன்சைட் ஸ்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ரோகித்தின் காயம் குறித்து பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.