ரோகித் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கும் வீரர் இவர்தான் - வெளியான சூப்பர் அறிவிப்பு
தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சோதனை மற்றும் லேசான பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி மட்டும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதில் பிரியன்க் பன்ச்சல் என்னும் வீரர் இந்திய அணியில் சேர்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ‘A’ அணியில் விளையாடி வரும் பிரியன்க் பன்ச்சாலுக்கு இது முதல் தொடர் இல்லை. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி:
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ்" என்று அதில் பதிவிட்டுள்ளது.